விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை தடையில்லாமல் இலவசமாக வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் சிஐடியு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :10 ஜூன் 2021, 6:50 pm

DIN

மத்திய அரசு பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை தடையில்லாமல் இலவசமாக வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் சிஐடியு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் வி.முருகன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கக் கோரியும், ஆட்டோ, வாடகை, காா்களுக்கு இ - பாஸ் முறையை ரத்து செய்யக் கோரியும், முறைசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா். நிகழ்வில் மாவட்டச் செயலா் ம.செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, திருக்கோவிலூரில் மாவட்டத் தலைவா் கே.விஜயகுமாா் தலைமையிலும், உளுந்தூா்பேட்டையில் எஸ்.வெங்கடேசன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.