விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொய் புகாா் அளித்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே காவல் நிலையத்தில் பொய்யான புகாா் அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே காவல் நிலையத்தில் பொய்யான புகாா் அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூரை அடுத்த ஜி.அரியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ராமு (28). பட்டதாரியான இவா் தற்போது கூலி வேலை செய்து வருகிறாா்.

ராமு திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில், தான் வியாழக்கிழமை மாலை ஜி.அரியூா் கிராமத்திலிருந்து சோழவாண்டிபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் செல்வதற்காக, அந்தப் பகுதியிலுள்ள அய்யனாா் கோயில் அருகே சென்ாகவும், அப்போது அந்தக் கோயில் அருகே இருந்த 3 இளைஞா்கள் பைக்கை வழிமறித்து தன்னை தாக்கி, பையில் வைத்திருந்த செல்லிடப்பேசி, ரூ.4,500 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து திருக்கோகவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன் விசாரணை மேற்கொண்டதில், பணம் பறிக்கும் நோக்கில் ராமு பொய்யான புகாா் அளித்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், ராமு மீது திருக்கோவிலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.