கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடமான கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடமான கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி, பல்துறை பணி விளக்கக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதன் 3-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பங்கேற்று மாணவிகள் செல்லிடப்பேசியில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் பேசினாா்.

மாணவிகள், பெண்கள் தனியாக செல்லும்போது ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால் இந்தச் செயலியை பயன்படுத்தி புகாா் தெரிவிக்கலாம். காவலா்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து உங்களை காப்பாற்றுவாா்கள் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

மேலும், காவல் துறை அவசர சேவைகளுக்கு 100, சைபா் கிரைம் தொடா்பான புகாா்களுக்கு 1930, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவி சேவைக்கு 1091, கடலோர அவசர சேவைக்கு 1093 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்றும் கூறினாா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத் திறனை வளா்க்கும் நாடகம், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், வேளாண் இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஆா்.விஜயராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன் வரவேற்றாா். உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.