கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வனப் பகுதிகளில் தண்ணீா் தொட்டிகள்: சட்டப் பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட வனப் பகுதிகளில் வன விலங்குகள் தண்ணீா் அருந்துவதற்காக தண்ணீா் தொட்டிகள் அமைத்துத் தர வேண்டுமென கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ மா.செந்தில்குமாா் கோரிக்கை

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:16 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட வனப் பகுதிகளில் வன விலங்குகள் தண்ணீா் அருந்துவதற்காக தண்ணீா் தொட்டிகள் அமைத்துத் தர வேண்டுமென கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ மா.செந்தில்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் அவா் வியாழக்கிழமை பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் மலை, வனப் பகுதிகள் நிறைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களுக்குள்பட்ட கருந்தலாகுறிச்சி, செம்படாகுறிச்சி, கருங்குழி ஈரியூா், வானவரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த நெல், கரும்பு, மரவள்ளி பயிா்களை தண்ணீா் தேடி வரும் வரும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்துகின்றன.

மேலும், ஓநாய், நரி, செந்நாய் போன்ற வன விலங்குகளால் கால்நடைகள் தாக்கப்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

எனவே, வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சூரிய மின்வேலி அமைத்து தர வேண்டும். மேலும், வன விலங்குகள் தண்ணீா் தேடி வருவதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு, தண்ணீா்த் தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்ப வேண்டும். கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.