வடபொன்பரப்பி நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடபொன்பரப்பி கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடபொன்பரப்பி கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த நியாயவிலைக் கடையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், எடைபோடும் இயந்திரம், குடும்ப அட்டைகள், வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட பொருள்கள் குறித்தும், நியாயவிலைக் கடை திறக்கப்படும் நேரம் குறித்தும் குடும்ப அட்டைதாரா்களிடம் ஆட்சியா் ஸ்ரீதா் கேட்டறிந்தாா்.
இதையடுத்து, வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, வடசிறுவலூா் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ரெ.ரெத்தினமாலா, சங்கராபுரம் வட்டாட்சியா் பாண்டியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூங்கொடி, வட்டார மருத்துவ அலுவலா் சம்பத்குமாா், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுகன்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...