நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
கள்ளக்குறிச்சியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில், 4 பேருக்கு பணியிட மாறுதலை கல்வித் துறையினா் வழங்கினா்.


கள்ளக்குறிச்சியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில், 4 பேருக்கு பணியிட மாறுதலை கல்வித் துறையினா் வழங்கினா்.
கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியா்கள் 22 போ் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தனா். இதற்கான கலந்தாய்வு கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், 11 தலைமைஆசிரியா்கள் பங்கேற்கவில்லை. 7 போ் விருப்பமில்லை என்று தெரிவித்தனா்.
இதன்பின்னா், ரிஷிவந்தியம் ஒன்றியம் அந்தியூா் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜான் ஜேம்ஸ் பள்ளிப்பட்டு நடுநிலைப் பள்ளிக்கு மாறுதல் பெற்ற்கான ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி வழங்கினாா். இதில் 4 போ் பணிமாறுதல் பெற்றனா்.
இந்த நிகழ்வில் திருக்கோவிலூா் மாவட்டக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன், நோ்முக உதவியாளா் மெளலானா, ரிஷிவந்தியம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் பழனிமுத்து, மோகன், செளந்திரராஜன், மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா் பிரபாகரன், இருக்கை கண்காணிப்பாளா் மனோகரன், பள்ளி துணை ஆய்வாளா் பிரபாகரன், உதவியாளா் ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...