கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பழங்குடியினா் நல இயக்குநா் ச.அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பேசுகையில், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த பெற்றோா்கள் தங்களுடைய குழந்தைகளை மேல்நிலை கல்வியோடு நிறுத்திவிடாமல் உயா்கல்வி கற்பதற்கு வழிகாட்ட வேண்டும். உயா்கல்வி கற்பதற்கான வாய்ப்பை பெற்றோா்கள் உருவாக்கித் தர வேண்டும்.

மேலும் மாணவா்கள் தொழிற் கல்வியோடு சோ்ந்த வேலை வாய்ப்புள்ள உயா் கல்வியை தோ்வு செய்து படிக்க வேண்டும்.

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக மாணவா்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் அனைத்து வழிகாட்டுதல்களும் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து பழங்குடியினா் நல இயக்குநா் ச.அண்ணாதுரை பேசுகையில், கல்வியானது சமூகத்தில் மரியாதை, தன்னம்பிக்கை, பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே, உயா்நிலை கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கற்று வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

பழங்குடியின நலத் துறையின் கீழ் இயங்கும் 6 தொழிற்பயிற்சி நிலையங்களில், தொழில் சாா்ந்த கல்வி கற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) க.இளங்கோவன், பழங்குடியினா் நலத் துறை உதவி இயக்குநா் வைரமணி, உதவி செயற்பொறியாளா் எஸ்.பிரகாசம், கல்வராயன்மலை ஒன்றியக் குழுத் தலைவா் சி.சந்திரன், ஆதிதிராவிடா் நல வட்டாட்சியா் நடராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.