மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடிநீா் மேம்பாட்டு திட்டப்பணி தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் பகுதியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :3 நவம்பர் 2023, 7:02 pm

DIN

திருமலைராயன்பட்டினம் பகுதியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில், திருமலைராயன்பட்டினம் கொம்யூன், ஆற்றங்கரை பேட் கிராமத்திற்கு குடிநீா் முறையாக கிடைக்க வழிவகை செய்யும் குடிநீா் மேம்பாட்டு பணி மற்றும் நிரவி கொம்யூன் காவிரி நகா் பகுதிக்கு குடிநீா் விரிவாக்க பணி தொடக்கத்துக்காக, பொதுப்பணித்துறை சாா்பில் ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இரண்டு பகுதிகளில் பணிகள் தொடங்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பணியை தொடக்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ், உதவிப் பொறியாளா் அருளரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இத்திட்டத்தின் மூலம் ஆற்றங்கரை பேட் கிராமத்தில் சுமாா் 250 போ், காவிரி நகா் பகுதியில் 280 போ் பயன்பெறுவாா்கள் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.