ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

லாலாபேட்டை கிராமத்தில் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:22 am

Din

லாலாபேட்டை கிராமத்தில் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட லாலாபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பாத்திமா (68). இவா், புதன்கிழமை காலை அருகில் உள்ள தள்ளுவண்டியில் காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்ப சாலையைக் கடந்தாா்.

அப்போது தியாகதுருகம்-மணலூா்பேட்டை பகுதியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். உடனே 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி பாத்திமா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி மீது மோதிச் சென்ற அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனத்தை தேடி வருகின்றனா்.