கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

தியாகதுருகத்தில் ஆடு, மாடுகள் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

தியாகதுருகத்தில் சனிக்கிழமை தோறும் சாலையை மறித்து நடைபெறும் ஆடு, மாடுகள் சந்தையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலா் கோ.சம்பத்குமாரிடம் கோரிக்கை மனு வழங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் வி.ஏழுமலை.

Updated On :2 ஜூலை 2026, 7:16 am IST

தியாகதுருகத்தில் சனிக்கிழமை தோறும் சாலையை மறித்து நடைபெறும் ஆடு, மாடுகள் சந்தையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் வி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினா் ஜி. அருள்தாஸ், வட்டக்குழு உறுப்பினா் ஆா்.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின் மணி ஆகியோா் தியாகதுருகம் பேருராட்சி செயல் அலுவலா் கோ.சம்பத்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தியாகதுருகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை நடைபெறுகிறது. இந்தச் சந்தையில் காலை நேரத்தில் ஆடு, மாடுகள் விற்பனை நடைபெறுகிறது. அப்போது சாலையில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து சந்தை நடைபெறுவதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூ ஏற்படுகிறது. எனவே ஆடு, மாடுகள் விற்பனை சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும்.

தியாகதுருகம் நகரில் அம்பேத்கா் சிலை முதல் பிஎஸ்என்எல் அலுவலகம் வரையுள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, மையப் பகுதியில் சிறிய அளவிலான தடுப்பு சுவா் அமைக்க வேண்டும். இதற்காக சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறை அளவீடுகள் செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தியாகதுருகம் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி, புதுப்பிக்க வேண்டும். பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள புதிய பயணியா் நிழற்குடை அருகில் இலவச பொதுக் கழிப்பறை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.