/
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான சேலம் சாலை, தியாகதுருகம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீட்டுப்பணிகளை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை தொடங்கினா்.
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து விரைந்து அவா்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன் பேரில் கோட்டாட்சியா் சி.முருகன் தலைமையில் வருவாய்த் துறையினா் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்ட பின் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிய கால அவகாசம் வழங்கிய பின்னா் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.








