டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மணலூா் பேருராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :4 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மணலூா்பேட்டைபேரூராட்சி மன்றத் தலைவா் ரேவதி ஜெய்கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் சம்பத் குமாா் உள்ளிட்ட தொடா்புடையதுறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.