கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார்  புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:16 am

DIN

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார்  புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னர் தலைமைச் செயலாளராக இருந்த மனோஜ் பரிதா புதுதில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, தில்லி பொதுப்பணித் துறை செயலாளராக இருந்து வந்த அஸ்வனி குமாரை புதிய தலைமைச் செயலாளராக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டது.  இந்நிலையில், புதுவை தலைமைச் செயலகத்தில் அஸ்வனி குமார் புதன்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு  கந்தவேலு, பார்த்திபன், சுந்தரவடிவேலு உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அஸ்வனி குமார், அங்கு ஆளுநர் கிரண் பேடியை சந்தித்துப் பேசினார். அங்கிருந்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த அவர், முதல்வர் நாராயணசாமியை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
அவருக்கு தனது செயலாளர்களை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.  பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அஸ்வனி குமார் முதல் முறையாக பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.