கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாஜக மாநிலத் தலைவரை கைது செய்யும் வரை போராட்டம்: தலித் இயக்க போராட்டக் குழு அறிவிப்பு

பெண் எம்எல்ஏவை அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனை கைது செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அனைத்து தலித் இயக்கங்களின் 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:54 am

தினமணி

பெண் எம்எல்ஏவை அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனை கைது செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அனைத்து தலித் இயக்கங்களின் போராட்டக்குழுத் தலைவர் நீலகங்காதரன் அறிவித்தார்.
 இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:
 புதுச்சேரியில் பிப்.16-ஆம் தேதி பாப்ஸ்கோ அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏ விஜயவேணியை அவதூறாக, ஜாதியின் பெயரைச் சொல்லி பேசியுள்ளார். இட ஒதுக்கீடு உரிமைக்கும், அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிராக பேசியுள்ளார்.
 இதுபற்றி அறிந்த விஜயவேணி எம்எல்ஏ காவல்துறையில் பி.சி.ஆர். பிரிவில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை அவரின் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 எனவே, பாஜக தலைவர் சாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்.
 பாஜக தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நகரம் முழுவதும் கண்டன சுவரொட்டி ஒட்டுவதுடன், தெருமுனை பிரசாரம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்லவும் உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.