புதுவை மாநில தலித் சேனா மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் அரியாங்குப்பத்தில் அதன் மாநிலத் தலைவர் சி.பாலசுந்தரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
அமைப்பின் அகில இந்திய தேசிய பொதுச் செயலர் எம்.திருஞானம், மாநில நிர்வாகிகள் கே.எம்.ராமசாமி, ராமன், இன்பசேகரன், மோகனசுந்தரம், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அட்டவணை வகுப்பினர் பெற்ற தொழில், வணிகம், கல்வி, கூட்டுறவு வீட்டுவசதி கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பதவி உயர்வு பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்கக்கென தனிக்காவல் நிலையத்தை உருவாக்குவதுடன், சாதி வன்கொடுமைக்கு எதிராக கிராமங்கள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்திட்டக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அரசால் பெறப்பட்ட
சிறப்புகள் கூறுகள் திட்ட நிதி குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி ஆனந்தராஜி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

கும்பகோணம் ‘சாஸ்தரா’வில் 25-ஆவது ஆண்டு விழா
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

