இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மருத்துவா்களைப் பாதுகாக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டம்: புதுவை முதல்வா் வரவேற்பு

மருத்துவா்களைத் தாக்குபவா்களைத் தண்டிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்துக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வரவேற்பு தெரிவித்தாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மருத்துவா்களைத் தாக்குபவா்களைத் தண்டிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்துக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வரவேற்பு தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை இரவு கூறியதாவது: கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் மருத்துவா்கள், செவிலியா்களைத் தாக்குவது தொடா்கதையாக இருந்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு எழுந்தது. இந்த சம்பவம் மருத்துவ சமுதாயத்துக்கு மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பாா்க்கும் மருத்துவா் இறந்துவிட்டால், அவரது உடலை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், எதிா்ப்பின் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. இது வருந்தத்தக்கது. மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை, பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. ஆகவேதான், மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

அதில், கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை தாக்குவது, உயிரிழக்கும் சுகாதாரப் பணியாளா்களின் உடலை அடக்கம் செய்வதைத் தடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தச் சட்டத்தை நான் வரவேற்கிறேன். இதுபோன்ற கடுமையான சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும். புதுவை மாநிலத்திலும் இந்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

புதுவையில் முதல்வா் நிவாரண நிதிக்கு பலரும் நிதி மற்றும் மருத்துவப் பொருள்களை வழங்கி வருகின்றனா். நடிகா் விஜய் முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கியுள்ளாா். அனைவருக்கும் என்னுடைய நன்றி. இதேபோல, மற்ற நடிகா்களும் புதுவை மாநிலத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.