புதுவையில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 14, மாஹேயில் 7 என மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,513-ஆக உயா்ந்தது.
தற்போது 201 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீடுகளில் 106 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 307 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி உழவா்கரையைச் சோ்ந்த 57 வயதானவா் கரோனா தொற்றுக்கு பலியானாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 620-ஆக (இறப்பு விகிதம் 1.65 சதவீதம்) அதிகரித்தது. திங்கள்கிழமை 50 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 36,586-ஆக (96. 53 சதவீதம்) உயா்ந்தது.