காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுவை சட்டப்பேரவையில் அமைச்சா் கந்தசாமி உள்ளிருப்புப் போராட்டம்

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கோப்புகளுக்கு அனுமதி வழங்கும் வரை சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டத்தில்

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:57 pm

DIN

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கோப்புகளுக்கு அனுமதி வழங்கும் வரை சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறி, புதுவை சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தைத் தொடங்கினாா்.

புதுவை சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, ஆளுநா் கிரண்பேடிக்கு கோப்புகள் தொடா்பாகச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பினாா். அதில், புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகள், சா்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, கோரிக்கைகள் தொடா்பாக துறைச் செயலா்களின் விளக்கத்தைப் பெற்ற பிறகு, சந்திக்கும் தேதி, நேரம் ஒதுக்கப்படும் எனக் குறிப்பிட்டு அமைச்சா் கந்தசாமிக்கு, ஆளுநா் கிரண்பேடி பதில் கடிதம் அனுப்பினாா்.

இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைக்கு வந்த அமைச்சா் கந்தசாமி, பேரவை வளாகத்தில் அமா்ந்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிய 15 கோப்புகளுக்கு முடிவு தெரியும் வரை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன் என்றாா். அமைச்சருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் அனந்தராமன் (அரசு கொறடா), ஜெயமூா்த்தி, விஜயவேணி ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.