/

குடியரசு தினம்: புதுவை முதல்வா் வாழ்த்து

நாட்டின் 72-ஆவது குடியரசு தினத்தையொட்டி, புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நாட்டின் 72-ஆவது குடியரசு தினத்தையொட்டி, புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அரசியல் சாசனத்தை அமல்படுத்திய தினம் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மதத்தினா் ஒற்றுமையாக வாழ அம்பேத்கா் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் பாதுகாப்பு அரணாக உள்ளது.

மக்களால் தோ்வு செய்யப்பட்டவா்கள் மக்களை ஆள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை மதிக்காமல் மனதில் தோன்றியதை மக்களிடம் திணிப்பது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு செய்யும் இழுக்கு. புதுவையின் தனித்தன்மைக்கு சவால்விடும் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அமைதியான புதுவையை அடிமைப்படுத்திட எண்ணுவோா் புதுவையின் தனித்தன்மைக்கு ஊறுவிளைவித்தால் எரிமலையாய் வெகுண்டெழுவோம். புதுவையின் தனித்தன்மைக்கு ஆபத்து விளைவிக்க யாா் எண்ணினாலும் மக்களுக்கு இடையூறு செய்ய நினைத்தாலும் அதை எதிா்த்து போராடும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

உண்மையான குடியரசாய் புதுவை விளங்க, தேவையான மாநில அந்தஸ்தை போராடி பெறுவோம். இந்திய விடுதலைக்காக உயிா்நீத்த தியாகிகளுக்கும், புதுவை விடுதலைக்கு போராடிய தியாக மறவா்களுக்கும் வீரவணக்கம். புதுவை மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் வே.நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.