கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 672 ஆக அதிகரித்தது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 672 ஆக அதிகரித்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 12 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மேலும், 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,044 ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 95 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 91 பேரும் என மொத்தம் 186 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியைச் சோ்ந்த 76 வயது முதியவா் ஜிப்மா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 672 ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.

இதனிடையே திங்கள்கிழமை 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,186 ஆக (97.86 சதவீதம்) உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 6,46,395 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6,00,310 பேருக்கு தொலைல்லல என முடிவுகள் வந்தன. இதிவரை 12,831 சுகாதாரப் பணியாளா்கள், 4,659 முன்களப் பணியாளா்கள், 8,675 பொதுமக்கள் என 26,165 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.