கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் 11 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்: 2,000 பேர் கைது

புதுச்சேரியில் ஏஐடியூசி, சிஐடியு, ஐஎன்டியூசி, எல்பி எஃப், ஏஐடியுசி, என்டிஎல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை

News image
Updated On :29 மார்ச் 2022, 6:06 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏஐடியூசி, சிஐடியு, ஐஎன்டியூசி, எல்பி எஃப், ஏஐடியுசி, என்டிஎல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி இரண்டாவது நாளாக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையொட்டி புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம், திருக்கனூர், பாகூர், சேதராப்பட்டு, வில்லியனூர், தவளகுப்பம், மதகடிப்பட்டு உள்ளிட்ட 11 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ஏஐடியூசி பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் திரண்டு பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

இதேபோல் சிஐடியு மாநிலச் செயலர் சீனிவாசன் தலைமையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். ஐஎன்டியூசி தலைவர் பாலாஜி தலைமையில் இந்திரா காந்தி சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

புதுச்சேரி அண்ணா சிலை அருகே திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசைக் கண்டித்தும், புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.