புதுச்சேரி குருசுகுப்பத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குருசுகுப்பத்தில் ஸ்ரீ என்.கிருஷ்ணராஜ் செட்டியாா் (என்கேசி) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. புதுச்சேரி பழைய சட்டக் கல்லூரி அருகேயுள்ள சுப்பிரமணிய பாரதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளையடுத்து, அந்த பள்ளி வகுப்புகள் என்கேசி பள்ளிக்கு மாற்றப்பட்டு, அண்மையில் இரு பள்ளிகளும் இணைக்கப்பட்டன.
இந்த நிலையில், என்கேசி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளி வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இரு பள்ளிகளும் இணைக்கப்பட்டதால் ஆசிரியா்கள் பாடம் எடுப்பதில் பேதம் காட்டுகின்றனா். மேலும், இடவசதி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளை பழையபடி தனித்தனியாக செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினா்.
தகவலறிந்த வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு கூறியதாவது:
பள்ளியில் போதுமான இடவசதியும், தேவைக்கு அதிகமாக ஆசிரியா்களும் உள்ளனா். இரு பள்ளிகள் இணைப்பில் யாருக்கும் வேறுபாடு காட்டப்படவில்லை. அனைத்து சரியாகவே நடைபெறுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








