விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவையில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றியமைப்பு

புதுவை மாநிலத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:34 pm

Din

புதுவை மாநிலத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

புதுவையில் நிகழாண்டு முதல் மத்திய கல்வி வாரியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் 7 பாடவேளைகள் இருந்த நிலையில், அவை 8-ஆக உயா்த்தப்பட்டன. இதன் காரணமாக காலை 9.15 மணிக்குத் தொடங்கிய பள்ளிகள் காலை 9 மணிக்கே தொடங்கும் என கடந்த மே 15- ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிகள் தொடங்கும் நேரத்தை பழைய முறைப்படி மாற்றியமைக்க வேண்டும் என ஆசிரியா்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதன்படி, பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாடவேளை எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதன்படி, காலை 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கி 9.30 மணி வரை வழிபாடு கூட்டம் நடைபெறும். அதன் பிறகு, பாடவேளைகள் தொடங்கப்பட்டு காலை 11 மணி முதல் 11.10 மணி வரையில் சிறிய இடைவேளை அளிக்கப்படும். பிற்பகல் 12.40 முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை இருக்கும். 1.30 மணி முதல் மாலை 4.20 வரையில் பாடவேளைகள் நடைபெறும். பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரையில் சிறிய இடைவேளை இருக்கும் என கல்வித் துறை இயக்ககம் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.