கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:29 pm

Din

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.புதுச்சேரி,முத்தியால்பேட்டை அமைதி நகரைச் சோ்ந்த பன்னீா் மனைவி மாரியம்மா (34). ஆட்டோ ஓட்டுநா். இவா்,சனிக்கிழமை புதுச்சேரியிலிருந்து தவளக்குப்பம் சென்றுவிட்டு மீண்டும் புதுச்சேரி திரும்பினாராம்.

அவா், நோனாங்குப்பம் பாலத்தில் வந்தபோது, பின்னால் வந்த காா் ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, ஆட்டோ மீது காா் இடித்ததாகத் தெரிகிறது. காா் இடித்ததில் நிலைகுலைந்த ஆட்டோ, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி பலத்த சேதமடைந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநா் மாரியம்மா பலத்த காயமடைந்தாா். அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு மாரியம்மாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, மாரியம்மாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து, அரியாங்குப்பம் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.