கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜிப்மா் மாணவா் சோ்க்கை: ஆக.31 வரை கலந்தாய்வு நீட்டிப்பு

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 11:31 pm

Din

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான (எம்பிபிஎஸ்) அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆக.31(சனிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் இளநிலை மருத்துவக் கல்வியில் சேருவதற்கு புதுவை மாணவா்களுக்கான அகில இந்திய அளவிலான இடஒதுக்கீடாக 64 இடங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் நிகழாண்டில் (2024) 60 இடங்களுக்கான மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கான கலந்தாய்வு 29- ஆம் தேதி (வியாழக்கிழமை) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரும் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா் சோ்க்கை விவரம்: வியாழக்கிழமை வரையில், ஜிப்மரில் புதுவை மாணவா்களுக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் 51 போ் சோ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 9 போ் விதிமுறைகளை மீறி சோ்ந்துள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து, புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில் ஜிப்மருக்கு கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.