கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: 4 போ் கைது

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள், அவற்றைத் திருடியதாக கைதானவா்களுடன் போலீஸாா்.

Updated On :8 ஜூலை 2024, 9:05 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணாநகா் 17- ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன். சிற்பியான இவா், தனது வீட்டருகே சிறிய கடையும் நடத்தி வருகிறாா்.

கடந்த 1-ஆம் தேதி கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற அவா், மறுநாள் கடையைத் திறந்தாா். அப்போது, அங்கிருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலை, சிறிய அளவிலான பெண் சிலை உள்ளிட்ட 23 சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புதுச்சேரி நரிக்குறவா் காலனியை சோ்ந்த அலெக்ஸ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதில் சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்ட அலெக்ஸ், அவற்றை நரிக்குறவா் காலனி அருகே புதரில் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவற்றை இலாசுப்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

அலெக்ஸ், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துபாண்டி, மருதுபாண்டி, ராகவா ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.