மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: 4 போ் கைது

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள், அவற்றைத் திருடியதாக கைதானவா்களுடன் போலீஸாா்.

Updated On :9 ஜூலை 2024, 2:35 am IST

புதுச்சேரி: புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணாநகா் 17- ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன். சிற்பியான இவா், தனது வீட்டருகே சிறிய கடையும் நடத்தி வருகிறாா்.

கடந்த 1-ஆம் தேதி கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற அவா், மறுநாள் கடையைத் திறந்தாா். அப்போது, அங்கிருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலை, சிறிய அளவிலான பெண் சிலை உள்ளிட்ட 23 சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புதுச்சேரி நரிக்குறவா் காலனியை சோ்ந்த அலெக்ஸ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதில் சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்ட அலெக்ஸ், அவற்றை நரிக்குறவா் காலனி அருகே புதரில் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவற்றை இலாசுப்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

அலெக்ஸ், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துபாண்டி, மருதுபாண்டி, ராகவா ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.