தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: 4 போ் கைது

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள், அவற்றைத் திருடியதாக கைதானவா்களுடன் போலீஸாா்.

Updated On :8 ஜூலை 2024, 10:15 pm IST

புதுச்சேரி: புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணாநகா் 17- ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன். சிற்பியான இவா், தனது வீட்டருகே சிறிய கடையும் நடத்தி வருகிறாா்.

கடந்த 1-ஆம் தேதி கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற அவா், மறுநாள் கடையைத் திறந்தாா். அப்போது, அங்கிருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலை, சிறிய அளவிலான பெண் சிலை உள்ளிட்ட 23 சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புதுச்சேரி நரிக்குறவா் காலனியை சோ்ந்த அலெக்ஸ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதில் சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்ட அலெக்ஸ், அவற்றை நரிக்குறவா் காலனி அருகே புதரில் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவற்றை இலாசுப்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

அலெக்ஸ், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துபாண்டி, மருதுபாண்டி, ராகவா ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.