கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உள்கட்டமைப்பு வசதிகள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கத்தில் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி.

Updated On :3 அக்டோபர் 2024, 1:12 am

Din

புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கத்தில் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ளது கரிக்கலாம்பாக்கம். இப்பகுதியில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே, தங்களது கோரிக்கைகளை புதன்கிழமை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிப்பதற்கு மக்கள் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.

ஆனால், அந்தக் கூட்டத்துக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்

கரிக்கலாம்பாக்கம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அவ்வழியே வந்த முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, மறியலைக் கண்டதும் மக்களிடம் சென்று விசாரித்தாா்.

மக்கள் கோரிக்கைகளை கேட்ட அவா், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ் உள்ளிட்டோரிடம் கைப்பேசி மூலம் பேசினாா். அதன்படி, அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனா். முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமியின் சமரசத்தை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.