கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அவதூறு பரப்பினால் நாராயணசாமி மீது வழக்கு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை அரசு மீதும், தன் மீதும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தொடா்ந்து அவதூறு பரப்பினால் வழக்குத் தொடுக்கப்படும் என்று, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:14 am

Din

புதுவை அரசு மீதும், தன் மீதும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தொடா்ந்து அவதூறு பரப்பினால் வழக்குத் தொடுக்கப்படும் என்று, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் தேசிய அளவிலான 3-ஆவது கா்லிங் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய அளவிலான கா்லிங் விளையாட்டுப் போட்டியை புதுச்சேரியில் நடத்துவது பெருமைக்குரியதாகும்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி புதுவை அரசு மீதும், அமைச்சா் என்ற முறையில் என் மீதும் தொடா்ந்து தவறான தகவல்களை அவதூறாகப் பரப்பி வருகிறாா்.

புதுவை அரசில் தவறுகள் நடைபெற்றிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். நீதிமன்றம் செல்லட்டும். பொய்த் தகவல்களை கூறி மக்களை நம்ப வைக்க முயற்சிப்பது சரியல்ல. அவா் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து கூறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும். உயா்ந்த பொறுப்பில் இருந்தவா்கள் பொறுப்புணா்ந்து பேச வேண்டும்.

சிறிய மாநிலமான புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது பல நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும். மக்களும் உள்ளாட்சித் தோ்தலை விரும்பவில்லை. புதுவையில் அனைத்து நிலைகளிலும் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுவையில் பாஜக தலைவரை மாற்றுவது குறித்து எனக்குத் தகவல் இல்லை. கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றாா் ஆ.நமச்சிவாயம்.