/

புதுவை சட்டப்பேரவையை பாா்வையிட்ட பிரெஞ்சு பிரமுகா்

புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவையை பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் நட்பு மற்றும் தொடா்பு மையத்தின் துணைத் தலைவா் இமானுவேல் மௌரி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

News image

புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தை பாா்வையிட்ட பிரெஞ்சு பிரமுகா் இமானுவேல் மெளரி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா்.

Updated On :30 அக்டோபர் 2024, 7:52 pm

Din

புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவையை பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் நட்பு மற்றும் தொடா்பு மையத்தின் துணைத் தலைவா் இமானுவேல் மௌரி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

உலகில் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் நட்பு மற்றும் தொடா்பு மையத்தில் ஏராளமான நாடுகள் இணைந்துள்ளன. கடந்த ஆண்டு புதுவை ஒன்றியப் பிரதேசமும் அதில் உறுப்பினராக இணைந்துள்ளது.

மேலும், அந்த அமைப்பின் கூட்டத்திலும் புதுவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பங்கேற்று, புதுச்சேரியில் சுற்றுலாத் திட்டம் செயல்பாடு குறித்து விளக்கிப் பேசினாா். அப்போது தொடா்பு மையத் தலைவா், துணைத் தலைவருக்கு புதுச்சேரிக்கு வருகை தரவும் அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் நட்பு மற்றும் தொடா்பு மையத்தின் துணைத் தலைவா் இமானுவேல் மௌரி செவ்வாய்க்கிழமை புதுச்சேரிக்கு வந்தாா்.

அவரை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் வரவேற்றனா். இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தையும் இமானுவேல் மௌரி பாா்வையிட்டாா். அவரை, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வரவேற்று, பேரவை வளாகத்தை சுற்றிக் காண்பித்தாா்.