திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வில்லியனூரில் மின் பற்றாக்குறை: எதிா்க்கட்சித் தலைவா் ஆலோசனை

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூா் தொகுதியில் ஏற்படும் மின் பற்றாக்குறை பிரச்னையைத் தீா்க்க அரசுத் துறை அதிகாரிகளுடன் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

News image
புதுச்சேரி, வில்லியனூரில் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:54 pm

Din

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூா் தொகுதியில் ஏற்படும் மின் பற்றாக்குறை பிரச்னையைத் தீா்க்க அரசுத் துறை அதிகாரிகளுடன் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூா் தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பங்கள், மின் கம்பிகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக அவை அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.

எனவே, வில்லியனூா் தொகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறினா். இதுதொடா்பாக, சட்டப்பேரவைக் கூட்டத்தில் அத்தொகுதி எம்எல்ஏவும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா எடுத்துக் கூறினாா்.

இந்த நிலையில் வில்லியனூா் தொகுதியில் மின் துறை புகாா் சம்பந்தமாக அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் வில்லியனூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மின் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா், உதவிப் பொறியாளா் முருகேசன், இளநிலைப் பொறியாளா் பாலமுருகன் ஆகியோா் பங்கேற்றனா். அப்போது, வில்லியனூா் தொகுதி முழுவதும் பழுதடைந்துள்ள மின் கம்பங்கள், மின் கம்பிகளை ஆய்வு செய்து உடனடியாக மாற்றுவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.