கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவையில் டெங்கு பரவல்... மருந்து தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்த முதல்வா் அறிவுறுத்தல்

புதுவையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு முதல்வா் என்.ரங்கசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:52 am

Din

புதுவையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு முதல்வா் என்.ரங்கசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வா் என். ரங்கசாமி அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு கூட்டத்தை நடத்தினாா்.

வணிகவரித் துறை கருத்தரங்கத்தில் நடந்த கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினா்.

அதிகாரிகள் முதல்வரிடம் கூறியதாவது: புதுவை யூனியனில் உள்ள 70,000 வீடுகளில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் 45,000 வீடுகளுக்கும், காரைக்காலில் 15,000 வீடுகளுக்கும், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் தலா 5,000 வீடுகளுக்கும் கொசு மருந்துகள் தெளிக்கப்படவுள்ளது.

மருத்துவமனைகளிலும் போதிய மருந்து, ரத்தம் மற்றும் கொசு வலைகளுடன் டெங்கு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கண்காணிப்பு மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையிலான என்எஸ்1 சோதனைக் கருவிகள் இருப்பில் உள்ளன. அதுபோல், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு கொசு லாா்வா எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள புகை இயந்திரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வழங்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறினா்.

அதிகாரிகள் கருத்தைக் கேட்ட முதல்வா், டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நகர மற்றும் கிராமப் பகுதிகள் முழுவதும் தூய்மைப் பணிகளையும், மருந்து தெளிக்கும் பணியையும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் ஆணையா் மற்றும் அரசுச் செயலா் (சுகாதாரம்) ராஜூ, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், சுகாதாரத் துறை பொறுப்பு இயக்குநா் செவ்வேள், விசிஆா்சி விஞ்ஞானி ஸ்ரீராம், சுகாதாரத் துறை சாா்புச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.