இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போலி மருந்து பிரச்னை: மாா்க்சிஸ்ட் தெருமுனைப் பிரசாரம்

News image
புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தியில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கோரி தெருமுனைப் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :13 டிசம்பர் 2025, 7:06 pm

Syndication

புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தியில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெருமுனைப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தியால்பேட்டை மணிக்கூண்டு எதிரில் தொடங்கிய தெருமுனைப் பிரசாரத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ராஜாங்கம் தலைமை தாங்கினாா். மூத்த தலைவா் முருகன் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தாா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் பெருமாள், போலி மருந்து தொழிற்சாலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்திப் பேசினாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் கொளஞ்சியப்பன், சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாரம், இந்திரா காந்தி சிலை ஆகிய பகுதியில் பிரசாரம் நடைபெற்றது. புதுச்சேரி நகர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.