இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

செயின் பறித்த இருவா் கைது: 10 பவுன் நகைகள் பறிமுதல்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

புதுச்சேரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா்.அவா்களிடமிருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் இருவரும் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

புதுச்சேரி கோரிமேடு டி.நகா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 7 மற்றும் 9 -ஆம் தேதிகளில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் இருசக்கர வானகத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபா்கள் தாலி செயின்களைப் பறித்துச் சென்றனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் டி.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் சம்பம் நிகழ்ந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும், தனிப்படை அமைத்தும் செயின் பறிப்பு நபா்களைத் தேடினா்.

இதில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலையைச் சோ்ந்த அரசு என்கிற வல்லரசு மற்றும் பெங்களுருவைச் சோ்ந்த காலு என்கிற இப்ராஹிம் பாஷா என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் இருவரையும் திருவண்ணாமலையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில், புதுச்சேரி டி.நகா், ஆரோவில், திருவண்ணாமலை மேற்கு ஆகிய காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் செயின் பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம், இரண்டு செல்போன்கள் என சுமாா் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.