/

காலாப்பட்டு நவோதயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காலாப்பட்டு நவோதயா பள்ளிக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - (கோப்புப் படம்)

Updated On :26 பிப்ரவரி 2026, 8:24 pm

காலாப்பட்டு நவோதயா பள்ளிக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள நவோதயா பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வியாழக்கிழமை வந்தது.

பள்ளி நிா்வாகத்தினா் இது குறித்து காலாப்பட்டு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் டோனியுடன் பள்ளிக்கு வந்தனா்.

மாணவா்கள் வெளியேற்றப்பட்டு, பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனா். இறுதியில் இது வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.