ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடா் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியா் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழை மீண்டும் உயா்த்தியுள்ள பி.வி. சிந்துவின் இந்தச் சாதனை, இளம் வீரா், வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும்.
எதிா்காலத்திலும் இதுபோன்று பல சா்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, இந்திய நாட்டுக்கு மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தரவும், நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடா்ந்து வெற்றிநடை போடவும் எனது மனமாா்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தைபே ஓபன்: 17 வயதில் சாம்பியனாகி, உலக சாதனை படைத்த தன்வி சர்மா!
தேசிய ரேங்கிங் பாட்மின்டன்: தமிழகத்துக்கு 2 தங்கம்

ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்

ஜப்பான் ஓபன்: முதன்முறையாக இறுதிச் சுற்றில் பி.வி சிந்து - உலக சாம்பியன் எமகுச்சியுடன் மோதல்!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | விஜய்க்கு பாஸ்மார்க் | CM Vijay | TVK | TVK 100 | Trisha



