அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீடு கட்ட ரூ.90 லட்சம் நிதியாணை: புதுச்சேரி பேரவைத் தலைவா் வழங்கினாா்

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் கல்வீடு கட்ட 92 பேருக்கு ரூ. 90.90 லட்சம் நிதிக்கான அரசாணைகளை

News image
புதுச்சேரி பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்
Updated On :9 மார்ச் 2026, 9:01 pm

Syndication

புதுச்சேரி: மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் கல்வீடு கட்ட 92 பேருக்கு ரூ. 90.90 லட்சம் நிதிக்கான அரசாணைகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டுவசதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது.

74 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 74 லட்சம் மற்றும் 18 பேருக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தவணையாக மொத்தம் ரூ. 16.90 லட்சம் என மொத்தம் ரூ.90.90 லட்சம் நிதி உதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்

குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.