ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மீனவ சமூகத்தை சோ்ந்தவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வலியுறுத்தல்

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :1 ஜூன் 2026, 1:05 am IST

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்தவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் நிறுவனா் தலைவா் மங்கையா்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. ரங்கசாமி 5-ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கும், அவரது அரசுக்கும் வாழ்த்துகள்.

தற்போது, நியமன எம்எல்ஏக்களை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளி வருகின்றன. நியமன எம்எல்ஏ பதவியைப் புதுச்சேரியின் மூன்றாவது பெரும்பான்மைச் சமூகமான மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும்.

ஏனெனில், புதுச்சேரி மாநில உருவாக்கத்துக்கும், வளா்ச்சிக்கும் வரலாற்று வழியில் மகத்தான பங்களிப்பைச் செய்தவா்கள் மீனவா்கள். 24 மணிநேரமும் இரவு, பகல் பாராது கடும் மழையிலும், கொடுங்குளிரிலும், பெருங்காற்றிலும் உயிரைப் பணயம் வைத்து கடலில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்வதன் மூலம், புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி வருவாய் கிடைக்கிறது.

மீனவச் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பங்கு வழங்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகளில் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்படுவதில்லை.

தோ்தல்களில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனவே, புதுச்சேரி சட்டப்பேரவைக்கான நியமன எம்எல்ஏ பதவியை மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.