இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆயுதப்படை போலீஸாருக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற காவல் திறனாய்வுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:07 am

DIN

சென்னையில் நடைபெற்ற காவல் திறனாய்வுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 
சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில், அகில இந்திய 61-ஆவது காவல் திறனாய்வுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டி தமிழகத்தில் நடத்தப்பட்டது. இதில், மூன்று யூனியன் பிரதேசங்கள், ஆறு மத்திய படையினர் மற்றும் 21 மாநிலங்களின் போலீஸார் என 1,400 பேர் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் போலீஸார் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவிலிருந்து மோட்டார் வாகன சாகசப் போட்டிக்கு தலைமைக் காவலர்கள் பூபாலன், வேல்முருகன் மற்றும் போலீஸார் சம்பத், விஜய் பாலாஜி, அந்தோனி உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டனர்.
   இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு சாகசங்களை நிகழ்த்தினர். இவர்களின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி தமிழக சி.பி.சி.ஐ.டி. ஏடிஜிபி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். 
அதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சனிக்கிழமை ஆயுதப்படை போலீஸாருக்கு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, மோட்டார் வாகன பிரிவு எஸ்.ஐ. துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.