இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

கல்லூரி நேரத்தில் போதிய அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகர்ப் பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவ, மாணவிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:01 am

தினமணி

கல்லூரி நேரத்தில் போதிய அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகர்ப் பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவ, மாணவிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
 உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாண்டூர், செங்குறிச்சி, பாதூர், வெள்ளையூர், குமாரமங்கலம், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் இலவச பேருந்துப் பயண அட்டை மூலம் விருத்தாசலம் அரசுக் கல்லூரிக்கு சென்று வந்தனர். அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட 3 பேருந்துகளில் ஒரு பேருந்தை உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை நிர்வாகம் நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் 2 நகர்ப்பேருந்துகளை சிறைபிடித்து கூடுதலாக பேருந்துகளை இயக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
 உளுந்தூர்பேட்டை போலீஸார் பேருந்து நிலையத்துக்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 இந்த மறியல் போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.