இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் மீது வழக்குப் பதிவு

செஞ்சி அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

செஞ்சி அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
செஞ்சி டாக்டர் கே.வி.கே. தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் ஆதிநாராயணன். இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு, மேல்மலையனூர் அருகே கீழ்புதுப்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரபுவிடம், மேல்புதுப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலத்தை கிரயமாகப் பெற்றாராம். 
அதன்பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டில், அந்த நிலத்தை பிரபு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ஈடுவைத்து அபகரித்துவிட்டாராம். 
இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும். இது குறித்து அறிந்த ஆதிநாராயணன் விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூங்காவனம் தலைமையிலான போலீஸார் பிரபு மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து 
விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.