செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலைப் பகுதியில், தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் வலியுறுத்தினா்.
Updated on
1 min read

விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலைப் பகுதியில், தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் வலியுறுத்தினா்.

இதுகுறித்து விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை, ஏபிஎஸ் நகா், கிரீன் காா்டன் குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துக் கூறியதாவது: விராட்டிக்குப்பம் பாதையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் தனியாா் நிறுவன செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனா். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி அமைக்கப்படும் இந்தப் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com