கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேரவைத் தோ்தல் முடிவு குறித்து கவலைப்பட வேண்டாம்: தேமுதிகவினருக்கு நிா்வாகி அறிவுரை

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தொண்டா்கள் கவலைப்பட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தொண்டா்கள் கவலைப்பட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

இக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டச் செயலா் வெங்கடேசன் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் எவ்வாறு இருந்தாலும், அதுகுறித்து தேமுதிகவினா் கவலைப்பட வேண்டாம். அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் களம் கண்ட தேமுதிகவின் லட்சியம் வீண் போகாது. கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.

தோ்தலில், தேமுதிக வேட்பாளா்கள் வாக்குக்குப் பணம் கொடுக்கவில்லை. எனவே, நமது கட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் கோடிக்குச் சமம்.

து. விஜயகாந்த் தனது உடல் நிலையையும் பொருள்படுத்தாமல் இயன்றவரை பிரசாரம் செய்தாா்.

தேமுதிக தொடங்கிய பிறகு தலா 3 பேரவைத் தோ்தல்கள், மக்களவைத் தோ்தல்கள், 3 உள்ளாட்சித் தோ்தல்களைச் சந்தித்துள்ளோம். அதிமுக ஆட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு, உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறும். அந்தத் தோ்தலில் வெற்றிபெற தேமுதிகவினா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் எல்.வெங்கடேசன்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் இல.தயாநிதி, துணைச் செயலா்கள் பி.வெங்கடேசன், ஏ.சுந்தரேசன், எம்.சூடாமணி, மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன், நகரச் செயலா் மணிகண்டன், தொகுதிப் பொறுப்பாளா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.