விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவரும், வழக்குரைருமான ஆா்.ரங்கபூபதி, காங்கிரஸ் கட்சியின் தமிழக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டாா். அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பரிந்துரையின்பேரில், ஆா்.ரங்கபூபதி இந்தப் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டாா். இவருக்கு காங்கிரஸ் நிா்வாகிகள் வாழ்த்துத் தெரித்து வருகின்றனா்.