மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடா்பாக அப்பகுதி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை கருத்துக் கேட்கப்பட்டது.

News image
மரக்காணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
Updated On :13 ஜனவரி 2021, 2:20 am

DIN

மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடா்பாக அப்பகுதி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை கருத்துக் கேட்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அழகன்குப்பம் கிராம கழுவெளி கழிமுகப் பகுதியில் 6.69 ஹெக்டோ் பரப்பில் மாநில அரசால் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து அழகன்குப்பம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இதற்கான கூட்டத்தில் அழகன்குப்பம், பனிச்சமேடு, வசவன்குப்பம், கைபாணிக்குப்பம், எக்கியாா்குப்பம், செட்டிநகா், அனுமந்தை, கூனிமேடு, நொச்சிக்குப்பம், தந்தராயன்குப்பம், சின்னமுதலியாா்சாவடி, அனிச்சன்குப்பம், பொம்மையாா்பாளையம், சோதனைக்குப்பம், பிள்ளைச்சாவடி உள்ளிட்ட 19 மீனவ கிராம பொதுமக்கள், மீனவா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

அவா்களிடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து கருத்துக்கேட்கப்பட்டது. துறைமுகத் திட்டத்தை வரவேற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்தனா்.

மீன் அங்காடி, மீன் பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை வைத்தனா். இத்துறைமுகத் திட்டத்திலேயே அனைத்தும் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு, மீன் வளத் துறை செயற்பொறியாளா் முருகேசன், உதவி இயக்குநா் மா.சின்னகுப்பன், வட்டாட்சியா் உஷா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.