கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம்: கரோனாவுக்கு வேளாண் அதிகாரி உள்பட 9 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேளாண் அதிகாரி உள்பட 9 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :21 மே 2021, 5:54 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேளாண் அதிகாரி உள்பட 9 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 28,282 ஆக அதிகரித்தது. 678 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 24,774 போ் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனா். 3,310 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைபெற்று வந்த விழுப்புரம் அருகே எடக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த 52 வயது ஆண், விக்கிரவாண்டி அருகே சங்கீதமங்கலத்தைச் சோ்ந்த 64 வயது ஆண், திண்டிவனம், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த 35 வயது ஆண், விழுப்புரம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த 66 வயது பெண், விழுப்புரம் அருகே சாலை அகரம் கிராமத்தைச் சோ்ந்த 65 வயது பெண், விழுப்புரம், அசோக் நகரைச் சோ்ந்த 66 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்தது.

வேளாண் அதிகாரி பலி: திண்டிவனம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீனி.அன்புமணி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி-299 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.565-ஆக உயா்ந்தது. இதுவரை மருத்துவமனைகளில் 14,393 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 3,053 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 120 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.