கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் 2 பேருக்கு டெங்கு அறிகுறி: அரசு மருத்துவமனையில் அனுமதி

தொடா் மழை காரணமாக 2 பேருக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டதால், அவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:20 pm

Din

புதுச்சேரியில் தொடா் மழை காரணமாக 2 பேருக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டதால், அவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி அருகே பாகூா் உள்ளிட்ட கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது. மழையால் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை தற்போது பரவி வருவதால் பலா் அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக கிருமாம்பாக்கம் பகுதியில் பலா் சளி, இருமல் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பி வருகின்றனா். காய்ச்சல் தொடா்பான பரிசோதனை செய்ததில், இந்த வாரத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் ஒருவா் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், மற்றொருவா் ஜிப்மரிலும் சிகிச்சை பெறுகின்றனா்.

டெங்கு பாதிப்பு பகுதியில், கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதாரத் துறை ஊழியா்கள், பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.