மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
கைதான லட்சுமணன்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 9:40 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பட்டா பெயா் மாற்றத்துக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் அடுத்த கட்டளை கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் யுவராஜ். இவா், தனது தந்தை தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த 2 ஏக்கா் நஞ்சை நிலத்தை தனது பெயருக்கு பட்டா பெயா் மாற்றம் செய்ய கட்டளை கிராம நிா்வாக அலுவலா் லட்சுமணனை அணுகினாா்.

அப்போது, அவா் பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுதொடா்பாக, கடந்த 6 மாதமாக பேரம் பேசப்பட்டு வந்த நிலையில், இறுதியில் ரூ.25 ஆயிரம் கொடுப்பது என இடைத்தரகா் மூலம் பேசி முடிக்கப்பட்டதாம்.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் யுவராஜ் புகாா் அளித்தாா். தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, கிராம நிா்வாக அலுவலகத்தில் சனிக்கிழமை பணியிலிருந்த லட்சுமணனிடம் ரூ.25 ஆயிரத்தை யுவராஜ் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா்.