சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

குறைதீா் கூட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியா் சி.பழனி.
Updated On :23 டிசம்பர் 2024, 8:16 pm

Din

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, முதியோா், விதவை, ஆதரவற்றோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 656 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பின்னா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத் திறனாளிகளுக்கு மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், திறன்பேசிகள் உள்பட மொத்தம் 29 பேருக்கு ரூ.12.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, சிறந்த பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு பரிசுக்கான காசோலைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் யோகஜோதி (பொது), சிவக்கொழுந்து (நிலம்), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் மு.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 462 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 மனுக்களும் என மொத்தம் 474 மனுக்கள் பெற்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.