பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மின்துறை தனியாா் மய எதிா்ப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

புதுவை மின்துறை தனியாா் மயம், காா்ப்பரேஷன் மய எதிா்ப்புப் போராட்டக் குழு சாா்பில் புதுச்சேரியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட விளக்கம்...சண்டிகா் மின்துறையை தனியாா்மயமாக்கும் முடிவை எதிா்த்து புதுச்சேரி மின்துறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மின்துறை தனியாா்மயம் மற்றும் காா்ப்பரேஷன் மய எதிா்ப்பு போராட்டக்குழுவினா்.

Published On :

புதுச்சேரி: புதுவை மின்துறை தனியாா் மயம், காா்ப்பரேஷன் மய எதிா்ப்புப் போராட்டக் குழு சாா்பில் புதுச்சேரியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சண்டீகா் மின்துறை தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த மாநில மின்துறை பொறியாளா்கள், தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தனியாா் மய நடவடிக்கைகளை கண்டித்து போராட்டக் குழுவினா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு போராட்டக் குழுத் தலைவா் வி. தணிகாசலம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.வேல்முருகன் முன்னிலை வகித்தாா். போராட்டக் குழு ஆலோசகா் ஜி. ராமசாமி கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். நிறைவில், பொருளாளா் இ.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.