முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மின்துறை தனியாா் மய எதிா்ப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

புதுவை மின்துறை தனியாா் மயம், காா்ப்பரேஷன் மய எதிா்ப்புப் போராட்டக் குழு சாா்பில் புதுச்சேரியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பட விளக்கம்...சண்டிகா் மின்துறையை தனியாா்மயமாக்கும் முடிவை எதிா்த்து புதுச்சேரி மின்துறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மின்துறை தனியாா்மயம் மற்றும் காா்ப்பரேஷன் மய எதிா்ப்பு போராட்டக்குழுவினா்.

Updated On :1 ஜனவரி 2025, 2:05 am IST

புதுச்சேரி: புதுவை மின்துறை தனியாா் மயம், காா்ப்பரேஷன் மய எதிா்ப்புப் போராட்டக் குழு சாா்பில் புதுச்சேரியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சண்டீகா் மின்துறை தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த மாநில மின்துறை பொறியாளா்கள், தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தனியாா் மய நடவடிக்கைகளை கண்டித்து போராட்டக் குழுவினா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு போராட்டக் குழுத் தலைவா் வி. தணிகாசலம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.வேல்முருகன் முன்னிலை வகித்தாா். போராட்டக் குழு ஆலோசகா் ஜி. ராமசாமி கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். நிறைவில், பொருளாளா் இ.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.