595 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: இளைஞா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கல் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595 ஜெலட்டின் குச்சிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கல் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595 ஜெலட்டின் குச்சிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள கல் குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகா்க்க ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்த கல் குவாரிக்குச் சென்று, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், இது தொடா்பாக வானூா் வட்டம், கொந்தமூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயவேல் மகன் மதன் (30) மீது பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...